Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலுார் மாவட்டத்தில் உறியடி ... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கிருஷ்ணஜெயந்தி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டி சதுர்த்தி விழா துவக்கம் : செப்.12ல் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பிள்ளையார்பட்டி சதுர்த்தி விழா துவக்கம் : செப்.12ல் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

05 செப்
2018
11:09

திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழா நேற்று(செப்., 4ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது. செப்.12 ல் தேரோட்டமும், சந்தனக்காப்பு அலங்காரத்தில் விநாயகர் எழுந்தருளலும் நடைபெறும்.

இக்கோயிலில் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம்.நேற்று (செப்., 4ல்) காலை 11:00 மணிக்கு மூஷிக படம் தாங்கிய கொடி கோயில் திருவீதி வலம் வந்தது. தொடர்ந்து கொடிமரம் அருகே மூஷிக வாகனத்தில் உற்ஸவர், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர், அங்குசத்தேவர் எழுந்தருளினர். தொடர்ந்து காலை 11:40 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இரவு மூஷிக வாகனத்தில் விநாயகர் திருவீதி உலா நடந்தது.

சந்தனக்காப்பு : நாளை (செப்., 6ல்) முதல் எட்டாம் திருநாள் வரை காலை 9:30 மணி அளவில் வெள்ளிக் கேடகத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.செப்.,9 மாலை 5:00 மணிக்கு கஜமுகா சூரசம்ஹாரமும், செப்.,12ல் மாலை தேரோட்டமும் நடைபெறும். அன்று மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை மூலவர் சந்தனக்காப்பில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த அலங்காரம் நடைபெறும்.பத்தாம் திருநாளான விநாயகர் சதுர்த்தியன்று காலையில் கோயில் திருக்குளத்தில் தீர்த்தவாரி, மதியம் திருமுக்கூரணி மோதக கொழுக்கட்டை படையல், இரவில் ஐம்பெரும் கடவுளர் திருவீதி உலாவுடன் சதுர்த்தி விழா நிறைவடையும்.முன்னதாக புதிய சிம்ம வாகனத்திற்கான சிறப்பு பூஜை நடந்து, விநாயகர் வாகனத்தில் எழுந்தருளலும் நடைபெற்றது. ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள் கோனாபட்டு அருணாசலம் செட்டியார் மற்றும் அரிமளம் சிதம்பரம் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி: காரை அங்காள பரமேஸ்வரி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.செஞ்சி அடுத்த காரை கிராமத்தில் புதிதாக ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ரிஷபேஷ்வரர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் சன்னதி கலசத்திற்கு ... மேலும்
 
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar