பதிவு செய்த நாள்
23
டிச
2018
12:12
உத்தரகோசமங்கை, -ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு நேற்று சந்தனப்பூச்சு களையப்பட்டு 21 வகை அபிேஷகங்கள் நடந்தன.உத்தரகோசமங்கையில் மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு பச்சை மரகத நடராஜர் தனி சன்னதி உள்ளது. ஒலி, ஒளி, அதிர்வுகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடராஜரருக்கு சந்தனக்காப்பிடப்பட்டு இருக்கும்.ஆண்டிற்கு ஒருமுறை, ஆருத்ரா தரிசனத்திற்கு முதல்நாள் மட்டும் சந்தனக்காப்பு களையப்பட்டு அபி ேஷகங்கள் நடக்கும். அதன்படி நேற்று காலை 9:30 மணிக்கு மரகத நடராஜருக்கு சந்தனம் களையப்பட்டது. 11:30 மணி முதல் மஞ்சள், திரவியப்பொடி, பால், பன்னீர், சந்தனம்,பாசிப்பயறு மாவு, தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடந்தன.பின்னர் சந்தனாதி தைலம் பூசப்பட்டது. தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் காலை முதல் நள்ளிரவு வரை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இரவு 10:30 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று அதிகாலை சுவாமியின் திருமேனியில் புதிய சந்தனம் பூசப்பட்டது.