பதிவு செய்த நாள்
12
ஜன
2019
01:01
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் உண்டியலில் 40 லட்சத்து 477 ரூபாய் காணிக்கை இருந்தது.மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மார்கழி மாத அமாவாசை முடிந்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த உண்டியல்கள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன.இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர்கள் பிரகாஷ், ஜோதி ஆகியோர் முன்னிலையில் கோவில் வளாகத்தில் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.அதில், 40 லட்சத்து 477 ரூபாய் ரொக்கம், 151 கிராம் தங்க நகைகள், 335 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தன.உண்டியல் எண்ணும் போது, அறங்காவலர் குழு தலைவர் கணேசன், அறங்காவலர்கள் ஏழுமலை, ரமேஷ், செல்வம், மணி, சரவணன், சேகர், ஆய்வாளர் அன்பழகன், கண்காணிப்பாளர் வேலு உட்பட பலர் உடனிருந்தனர்.