பீகார் மாநிலம் கயாவில் உள்ள தட்சிணார்கா கோயிலில் ’சூர்யகுண்டா’ என்னும் குளம் உள்ளது. இங்கு பக்தர்கள் தர்ப்பணம் செய்கின்றனர். தர்ப்பணப் பொருளை சூரியனே முன்னோரிடம் சேர்ப்பதாக ஐதீகம். கிரானைட் கல்லால் ஆன சூரியன் சட்டையுடன், இடுப்பில் வளையமும், காலில் பூட்சும் அணிந்துள்ளார். 13ம் நூற்றாண்டில் ஆந்திரா வாரங்கல்லை ஆட்சி செய்த பிரதாபருத்ரா என்ற மன்னர் இக்கோயிலைக் கட்டினார். சென்னையிலிருந்து கயாவுக்கு ரயில் உள்ளது. தூரம் 1782 கி.மீ.,