திருநெல்வேலி :நெல்லையில் நாளை (2ம் தேதி) அய்யா வைகுண்டர் அவதார தின விழா நடக்கிறது. இதுகுறித்து அய்யா தர்மயுக வழி பேரவை தலைவர் பாலமுருகன் கூறியதாவது: அய்யா வைகுண்டர் தின விழா நெல்லை டவுன் பார்வதி தியேட்டர் அருகில் தாமரைக்குளத்தில் நாளை (2ம் தேதி) நடக்கிறது. காலை 7 மணிக்கு உகப் படிப்பு, பால் அன்னம் வழங்கல், 10 மணிக்கு அகில திரட்டு விளக்கவுரை, 11 மணிக்கு பணி விடை, மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பை தொடர்ந்து உன்பாண் தர்மம் நடக்கிறது. மாலை 3 மணிக்கு நெல்லை டவுன் நான்கு ரத வீதிகளில் அய்யா வைகுண்டர் வாகன பவனி நடக்கிறது. இரவு 7 மணிக்கு அகில திரட்டு மூலம் ஆன்மிக பெரியோர்கள் விளக்கவுரை, இரவு 10 மணிக்க இரவு 10 மணிக்கு அய்யா அருளிசை வழிபாடு நடக்கிறது. காலை முதல் இரவு வரை அன்னதானமும் நடக்கிறது. அய்யா வைகுண்டர் அவதார தின விழாவான மாசி மாதம் 20ம் தேதியை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும். அவதார தினத்தன்று மதுக் கடைகளை மூட வேண்டும். மது மற்றும் போதை பொருட்களை முற்றிலுமாக தடை செய்து அதில் பணியாற்றியவர்களுக்கு மாற்று தொழில் வழங்க வேண்டும். சாதி, மத இட ஒதுக்கீடை முற்றிலுமாக தடை செய்து கல்வி தகுதி அடிப்படையில் மட்டுமே முன்னுரிமை வழங்க வேண்டும். அய்யா அருளிய அகில திரட்டு மூலமாக மனித வாழ வேண்டிய கடமைகளை பள்ளி, கல்லூரி பாட திட்டத்தில் பதிப்பு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்