Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்மநாப சுவாமி கோவில் நெல்லையில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா! நெல்லையில் அய்யா வைகுண்டர் அவதார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூண்டி கோவிலில் தேர்த்திருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 மார்
2012
11:03

அவிநாசி :திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கொங்கு ஏழு சிவாலயங்களில் ஒன்றானதும், சுந்தரமூர்த்தி நாயனரால், தேவராம் பாடப்பெற்றதுமான திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் தேர்த் திருவிழா இன்று காலை 7.00 மணிக்கு ரோஹிணி நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இரவு சுவாமி வீதியுலா காட்சி நடக்கிறது. நாளை இரவு சூரிய சந்திர மண்டல காட்சியும், 3ம் தேதி பூத, சிம்ம வாகன காட்சியும், 4ம் தேதி புஷ்ப விமான காட்சியும் நடக்கின்றன. வரும் 5ம் தேதி பஞ்சமூர்த்திகளுடன், ரிஷப வாகனத்தில் திருமுருகநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 6ம் தேதி திருக்கல்யாண உற்சவம், யானை, அன்ன வாகன காட்சி நடக்கிறது. வரும் 7ம் தேதி மக நட்சத்திரத்தில் விநாயகப் பெருமான், திருமுருகநாத சுவாமி, ஸ்ரீசண்முகநாதர் உட்பட மூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். அன்றைய தினம் இரவு 9.00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. அமைச்சர் ஆனந்தன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். 8ம் தேதி மீண்டும் தேரோட்டம், 9ம் தேதி பரிவேட்டை, குதிரை, சிம்ம வாகன காட்சி நடக்கிறது. வரும் 10ம் தேதி இரவு 7.00 மணிக்கு கூப்பிடு விநாயகர் கோவிலில், பூண்டி கோவில் தல வரலாற்றில் இடம் பெற்ற ஸ்ரீசுந்தரர் வேடுபறி திருவிழா நடக்கிறது. வரும் 11ல் பிரம்மதாண்டவ தரிசன காட்சி, 12ம் தேதி மஞ்சள் நீர் விழா, இரவு மயில் வாகன காட்சியுடன் திருவிழா நிறைவடைகிறது. விழாவையொட்டி, கோவில் வளாகத்தில் தினமும் இரவு 7.00 மணிக்கு கலை நிகழ்ச்சி நடைபெற உள் ளது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சரவணபவன், தக்கார் வெற்றிச்செல்வன் ஆகியோர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒரகடம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம் ஹாரம் நாளை நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா விமரிசையாக நடந்தது.குன்றத்துார் முருகன் ... மேலும்
 
temple news
வேலுார்: வேலுார், ஸ்ரீபுரம் பொற்கோவில் வளாகத்தில் குருஸ்தானம் பூஜை மண்டபம் திறப்பு விழா மற்றும் மகா ... மேலும்
 
temple news
திருப்பூர்: அலகுமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் சாமிநாதன், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை ... மேலும்
 
temple news
திருப்பூர்: ‘வனத்துக்குள் திருப்பூர் –11’ திட்டத்தில் நேற்று, சிவன்மலை சுப்பிரமணியர் கோவிலுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar