நமக்கு மேலான ஒருவன் இருக்கிறான் என்ற உணர்வைப் பெறுவதே பிறவிப்பயன் என்கிறார்கள் ஞானிகள். அதற்கான அடிப்படை சடங்கே உபநயனம். உபநயனம் என்பதற்கு ‘துணை கண்’ என்று பொருள். நமக்கு இருக்கும் இருகண்கள் வெளியுலகப் பார்வையைத் தருகின்றன. உபநயனம் என்னும் துணைக்கண், அறிவுப்பார்வையைத் தருகிறது. பிரம்மத்தை (கடவுளை) பற்றி அறிந்து கொள்வதே உபநயனத்தின் நோக்கம்.