அகத்திக்கீரையில் அமிர்தத்தின் துளி இருப்பதாகச் சொல்வர். அதனைப் பசுவுக்கு கொடுப்பதற்கு ‘கோக்ராஸம்’ என்று பெயர். இதைக் கொடுப்பதன் மூலம் பிதுர்களின் (முன்னோர்) ஆசி நமக்குக் கிடைக்கும். முன்னோர் வழிபாட்டுக்குரிய அமாவாசை மட்டுமில்லாமல், எந்தநாளிலும் கொடுக்கலாம். எல்லோரும் செய்ய வேண்டிய அடிப்படை தர்மம் இது.