பதிவு செய்த நாள்
27
ஜூன்
2019
12:06
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலுக்கு, புதியதாக நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர் குழுவினர், தனவேலு எம்.எல்.ஏ., முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
பாகூரில் 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, ஏற்கனவே நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழுவினரின் பதவி காலம் முடிவடைந்தது. இதனையடுத்து, இந்து அறநிலைய துறை மூலமாக புதிய அறங்காவலர் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.புதிய அறங்காவலர் குழுவினர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி மூலநாதர் சுவாமி கோவிலில் நடந்தது. தனவேலு எம்.எல்.ஏ., முன்னிலையில், தலைவராக முத்துவேல், துணை தலைவராக சக்திவேல், செயலராக காத்தவராயன், பொருளாளராக பிரபு, உறுப்பினராக முத்துகண்ணு பொறுப்பேற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில், நிர்வாக அதிகாரி பாலமுருகன், முன்னாள் அறங்காவலர் குழுவினர், அர்ச்சகர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.