பதிவு செய்த நாள்
26
ஆக
2019
11:08
பழநி: பழநி முருகன் கோவிலில், 73 கோடி ரூபாயில், இரண்டாவது, ரோப் கார் அமைக்கும் பணி, நேற்று துவங்கியது.
பழநி முருகன் மலைக்கோவில், ரோப் கார் ஸ்டஷேன் அருகே, 73 கோடி ரூபாயில், இரண்டாவது ரோப் கார், நவீன தொழில் நுட்பத்தில் அமைக்கப்படுகிறது. பிரான்சைச் சேர்ந்த, போமா ரோப்வே நிறுவனம், சென்னை தனியார் நிறுவனத்துடன் இணைந்து, பணியை மேற்கொள்கிறது.இதற்காக, ரோப் கார் அமைய உள்ள இடத்தில், நேற்று, இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் முன்னிலையில், கட்டுமான பணிக்காக, குழி தோண்டும் நிகழ்ச்சி, சிறப்பு பூஜையுடன் நடந்தது. புதிய ரோப் காரில், ஒரு பெட்டியில், 10 பேர் அமரலாம். கீழ், மேல் என, மொத்தம் எட்டு பெட்டிகள் பொருத்தப்படும். இரண்டு நிமிடங்களில், மலைக்கு செல்லலாம். தற்போதைய ரோப் காரில், ஒரு மணி நேரத்திற்கு, 200 பேர் செல்கின்றனர்.
புதிய ரோப் காரில், 1,200 பேர் வரை செல்லலாம். 18 மாதங்களில், இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுமான பணி மேற்கொள்ளும் நிறுவனம், ஐந்து ஆண்டுகள் பராமரிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.