துளசி என்னும் சொல்லுக்கு ’ஒப்பிட முடியாதது அல்லது உயர்ந்தது’ என்பது பொருள். துளசியால் அர்ச்சனை செய்வது, துளசிமாலை சாத்துவது விஷ்ணுவுக்கு விருப்பமானவை. தோஷம் கிடையாது என்பதால், முதல் நாள் பறித்த துளசியை பூஜைக்கு பயன்படுத்தலாம்.
நைவேத்யம் படைக்கும் போது அதன் மீது துளசியை வைப்பது புனிதமானதாகும். அன்ன, ஆடை தானம் அளிக்கும் போது அதன் மீது துளசி வைத்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.
’ஒரு துளசி இலையால் பூஜித்தாலும் அவரை அடியவராக ஏற்பேன்’ என கீதையில் கிருஷ்ணர் குறிப்பிட்டுள்ளார். ஒரு சமயம் சத்யபாமாவுக்கும், ருக்மணிக்கும் நடந்த போட்டியில் கிருஷ்ணருக்கு துலாபாரமாக பொன் வைத்த போது தராசின் தட்டுகள் சமமாக வில்லை. இறுதியில் ருக்மணி பக்தியுடன் ஒரு துளசி இலையை வைக்க சமநிலையை அடைந்தது.