ஒருமுறை விஷ்ணு பக்தரான மன்னர் பத்மாட்சன் தவத்தில் ஈடுபட்டார். மன்னருக்கு காட்சியளித்த விஷ்ணு விரும்பிய வரம் அளிப்பதாக தெரிவித்தார். மகாலட்சுமியே தனக்கு மகளாக பிறக்க வேண்டும் எனக் கேட்டார் மன்னர். விஷ்ணு ஒரு மாதுளம் பழத்தை கொடுத்து, ’உன் விருப்பம் விரைவில் நிறைவேறும்’ என்றார். மன்னரின் கைக்கு வந்ததும் பழம் பெரிதாக வளரத் தொடங்கியது. வியப்புடன் அதை உடைத்துப் பார்த்த போது அதன் ஒருபுறம் மாதுளை முத்துக்களும், மறுபுறத்தில் பேரழகு மிக்க பெண் குழந்தையும் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். தாமரை மலர் போல சிரித்த முகத்துடன் காட்சியளித்ததால் குழந்தைக்கு ’பத்மா’ என பெயரிட்டார். மாதுளை மரம் இருக்கும் வீட்டில் மகாலட்சுமி தங்கியிருப்பாள்.