பதிவு செய்த நாள்
23
செப்
2019
12:09
நாமக்கல்:- புரட்டாசி மாதம், முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷகங்கள் நடந்தன.
நாமக்கல்லில், வரலாற்று சிறப்புமிக்க ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. தமிழ் மாதம் முதல் ஞாயிறு, அமாவாசை, பவுர்ணமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி உள்ளிட்ட விழாக்காலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அந்த வகையில், நேற்று புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.காலை, 9:00 மணிக்கு வடை மாலை அலங்காரம் நடந்தது. தொடர்ந்து நல்லெண்ணெய், சீயக்காய்த்துாள், திருமஞ்சள், பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் சிறப்பு அபி ஷேகங்கள் நடந்தன. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. ஈரோடு, சேலம், தர்மபுரி, கரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.