பதிவு செய்த நாள்
15
அக்
2019
01:10
ஈரோடு: ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி தேர்த்திருவிழா கடந்த, 1ல் தொடங்கி, 11ல் நிறைவு பெற்றது. இதையொட்டி பக்தர்கள் காணிக்கை செலுத்த, சனிக்கிழமைகளில் மூன்று ஸ்ரீவாரி உண்டியல்கள், கோவில் பிரகாரத்தில் வைக்கப்பட்டன. நான்கு வார சனியில், இவற்றில் இரண்டு லட்சத்து, 13 ஆயிரம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. இதேபோல் அர்ச்சனை டிக்கெட் வசூல், 36 ஆயிரம் ரூபாய், சிறப்பு தரிசன டிக்கெட் வசூல், ?.28 லட்சம் ரூபாய், நன்கொடை, 78 ஆயிரம் ரூபாய், கருடசேவை வசூல், ?.66 லட்சம் ரூபாய் என, எட்டு லட்சத்து, 17 ஆயிரம் ரூபாய் மொத்தம் கிடைத்தது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.