வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் தேரோட்டம் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2024 06:05
தேனி: வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் தேரோட்டம் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்.
தேனி மாவட்டத்தில் நடக்கும் திருவிழாக்களிலேயே மிகவும் பெரிய சித்திரை திருவிழா இது தான். தீராத நோய் தீர்க்கும் அற்புதசக்யாகவே அம்மனை பக்தர்கள் வணங்கி வருகின்றனர். இதனால் நோய் கண்டவுடன் அம்மனுக்கு நேர்ந்து கொள்கின்றனர். நோய் குணமாகிய உடன் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். விழாக்காலங்களில் அம்மன் தினமும் ஒரு பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று துவங்கியது. ஆட்டம் பாட்டத்துடன் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்தனர். நான்கு ரதவீதிகளின் வழியாக உலா வரு தேர் மே13ல் தேர் மீண்டும் நிலைக்கு வரும்.