கரி வரதராஜ பெருமாள் கோவிலில் தங்க பல்லக்கில் பவனி வந்த ராமானுஜர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2024 11:05
கோவை; பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீ எம்பெருமானார் தர்ஷன ஐக்கிய சபா சார்பில் ஸ்ரீ ராமானுஜர் 1007வது திரு நட்சத்திர மகோத்சவ விழா கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக ராமானுஜர் தங்க பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.