Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பக்த ஆஞ்சநேயர், வெங்கடாஜலபதி
  உற்சவர்: பெருமாள்
  அம்மன்/தாயார்: பத்மாவதி
  ஆகமம்/பூஜை : வைணவம்
  புராண பெயர்: திண்டுக்கல்
  ஊர்: திண்டுக்கல்
  மாவட்டம்: திண்டுக்கல்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி, திருவோணம், மூலநட்சத்திரம், சுவாதி, சித்திரை, சங்கடஹர சதுர்த்தி, ஒவ்வொரு சனியும் சிறப்பு வழிபாடு, தனுர்மாத பூஜை, (மார்கழி முழுவதும்) காலை 5 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, ஸ்ரீராமநவமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, தமிழ் புத்தாண்டு முதல் நாள், கார்த்திகை தீபவிழா, ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஜென்ம நட்சத்திர விழா, சக்கரத்தாழ்வாருக்கு ஜென்ம நட்சத்திர விழா, விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி (நான்கு) சனிவாரம் சிறப்பு வழிபாடு பூஜை நடைபெறுகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7.15 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.15 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். சனிக்கிழமை இரவு 9.30 வரை. 
   
முகவரி:
   
  அருள்மிகு பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில், எம்.வி.எம். நகர், திண்டுக்கல்-624001.  
   
போன்:
   
  +91 90432 32653 
    
 பொது தகவல்:
     
  ஆஞ்சநேயர், விநாயகர் வடக்கு பார்த்துள்ளனர். நரசிம்மர், சக்கரத்தாழ்வார், வெங்கடாஜலபதி, பத்மாவதி தாயார் கிழக்கு பார்த்து உள்ளனர். கோயில் உள்புறத்தில் சஞ்சீவி ஆஞ்சநேயர் சிற்பமும், கிருஷ்ணரின் சிற்பமும் தனியாக உள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  வெங்கடாஜலபதி சன்னதி பெயர் சூட்டுதல், முடிகாணிக்கை பக்தர்கள் வேண்டுதல், திருமணதடை நீக்குதல், வேலை வாய்ப்பு பெற்றுதரல், கேட்டவருக்கு கேட்டவரம் தரல், கடன்பட்டவர்களின் வேண்டுதல் கடன் நீக்குதலுக்கு இங்கு பிரார்த்திக்கின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் வடைமாலை சாற்றுதல், நட்சத்திரப்படி அர்ச்சனை செய்து பலன்பெறல், துளசிமாலை அணிவித்தல் இங்கு நேர்த்திக்கடனாக செலுத்தப்படுகிறது. 
    
 தலபெருமை:
     
  இங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் ஒவ்வொன்றும் இங்கேயே தயாரிக்கப்படுகிறது. இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டு செல்பவர்கள், தாங்கள் நினைத்த காரியங்கள் அதிகளவில் கைகூடுகிறது என வெகு சில நாட்களில் வந்து கூறுகின்றனர். இப்பகுதி பக்தர்கள் இவரை ஜெனரல் டாக்டர் என அழைக்கின்றனர்.  
     
  தல வரலாறு:
     
  கடந்த 1999ல் ஆஞ்சநேயர் பிரதிஷ்டையானார். 2001ல் தும்பிக்கை ஆழ்வார் (விநாயகர்) பிரதிஷ்டை செய்யப்பட்டது. இங்குள்ள ஆஞ்சநேயர் தனது வாலை, தனது தலையில் வைத்துள்ளது சிறப்பமாகும். அந்த வாலில் மணி ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அத்தகைய தோற்றமுள்ள ஆஞ்சநேயர் சக்தி வாய்ந்தவர் என்பது ஆன்மிக மரபு. 2005ல் தென்திருப்பதி வெங்கடாஜலபதியும் பத்மாவதி தாயாரும் பிரதிஷ்டையானார்கள். அவர்கள் இருவரும் எழுந்தருளிய பின் 2008ல் நரசிம்மர், 2012ல் சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 1999ல் கும்பாபிஷேகம், 2012ல் மகா கும்பாபிஷேகமும் 2013-14ல் வருடாந்திர பூர்த்தி விழா கொண்டாடப்பட்டது.  
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar