Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: தண்டாயுதபாணி
  உற்சவர்: சண்முகர்
  தல விருட்சம்: பொன்அரளி
  தீர்த்தம்: குமரதீர்த்தம்
  ஆகமம்/பூஜை : காரண ஆகமம், காமீக ஆகமம்
  ஊர்: குமரகிரி
  மாவட்டம்: சேலம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம்.  
     
 தல சிறப்பு:
     
  இத்தலத்தில், கையில் தண்டத்துடன் குபேர திசையை (வடக்கு) நோக்கியபடி தண்டபாணி அருளுகிறார்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், குமரகிரி, சேலம் மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 427 - 240 064. 
    
 பொது தகவல்:
     
  இங்கு முருகனுக்கு நைவேத்யமாக சுத்தான்னம், மாம்பழம் படைத்து வழிபடுகின்றனர். இத்தலம், தியானம் செய்வதற்கு ஏற்ற அமைதியான தலமாக திகழ்கிறது. பிரகாரத்தில் துர்க்கை, நவக்கிரகம், ஐயப்பன் சன்னதிகள் உள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  தண்டாயுதபாணிக்கு மாம்பழம் படைத்து வணங்கிட புத்திரபாக்கியம் கிட்டும், தடைபட்ட திருமணங்கள் நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 
    
நேர்த்திக்கடன்:
    
  பால்குடம், காவடி எடுத்தல், முடி இறக்குதல், சேவல்காணிக்கை செலுத்துதல் என நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது. 
    
 தலபெருமை:
     
 

விபத்திற்கு பூஜை: இங்கு ஒரு வினோதமான அர்ச்சனை முறை உள்ளது. விபத்தில் காயம்பட்டவர் மற்றும் அவசரசிகிச்சை பெறுபவர்களுக்காக அவர்களின் உறவினர்கள் தண்டபாணிக்கு "திரிசதை அர்ச்சனை' செய்து பூஜை செய்கின்றனர். இக்கோயிலில் கிடைக்கும் விரிச்சி பூவில் பன்னீர், சந்தனம் கலந்து இந்த அர்ச்சனை செய்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைவதாகவும், இவரை வணங்கிச்சென்றால் விபத்துக்களில் சிக்காமல் தப்பிக்கலாம் என்றும் நம்புகின்றனர். எனவே, இங்கு வாகனம் வைத்திருப்போர் அதிகளவில் இந்த அர்ச்சனை செய்கின்றனர்.


சிறப்பம்சம்: குமரன் குடியிருந்த கிரி என்பதால், "குமரகிரி' எனப்படும் இத்தலத்தில், கையில் தண்டத்துடன் குபேர திசையை (வடக்கு) நோக்கியபடி தண்டபாணி அருளுகிறார். எனவே, இவரை வணங்கிட செல்வம் செழிக்கும். படிபூஜை செய்தால் ஆயுள் நீளும் என்பது நம்பிக்கை.

முருகனை குமரன் என அழைப்பதுமுண்டு குமரன் என்ற பெயருக்கு அழகில் மன்மதனை ஜெயித்தவன் என்று பொருளுமுண்டு. மலைக்குன்றின் மீது வடக்கு முகமாக அமைந்து விளங்கும் இக்கோயிலில் முருகன் தண்டாயுதபாணியாக அருள்பாலிக்கிறார். குன்றின்மீது வாகனங்கள் மூலம் செல்ல மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தர்களின் வசதிக்காக மூன்று திருமண மண்டபங்கள் உள்ளன. அன்பர்களது உள்ளமாகிய குகையில் உறைவதால் முருகனை குகன் என்றும் அழைப்பர்.  சுத்தபிரமத்தி னின்றும். தோன்றிய மணி போன்றவன் என்பதால் சுப்ரமணியன் என்றும் முருகன் அழைக்கப்படுகிறார். கந்தன் என்ற பெயருக்கு உமாதேவியால் சேர்க்கப்பட்டவன் என்றும் நறுமணத்தினை உடையவனாயும் நறுமணத்தை நமக்குத் தருபவனாகவும் இருக்கிறான் என்றும் பொருள். பரமேசுவரனின் ஐந்து முகத்தோடு அதே முகத்தினையும் சேர்த்து ஆறுமுகம் என்ற பெயரும் முருகனுக்கு உண்டு. வேலாயுதன், சண்முகன் முதலிய பெயர்களும் முருகனுக்கு உண்டு. எந்தப் பெயரில் பக்தர்கள் அழைத்தாலும் அருள்புரிந்து அரவணைத்துக் கொள்கிறான் முருகன்.
 
     
  தல வரலாறு:
     
 

நாரதர் கொடுத்த மாங்கனியை தனக்குத் தரவேண்டுமென கேட்டு, பெற்றோரிடம் கோபித்த முருகன் மயில் வாகனத்தில் பழநி சென்றார். தண்டாயுதபாணியாக சென்ற அவர் வழியில் இக்குன்றில் சிறிதுநேரம் தங்கிவிட்டு சென்றார்.  பிற்காலத்தில், பழநிக்கு சென்ற பக்தர் ஒருவர் இந்த குன்றில் சற்றுநேரம் களைப்பாறினார். அப்போது, "தண்டாயுதபாணியான நான் இவ்விடத்தில் குடியிருக்கிறேன்' என அசரீரி ஒலித்தது. அதைக்கேட்ட பக்தர் ஒன்றும் புரியாமல் பழநிக்கு சென்றார். பழநியில் அடியார் வேடத்தில் வந்த முருகன், பக்தரிடம் ஒரு திருவோட்டைக் கொடுத்து, அசரீரி ஒலித்த இடத்தில் கோயில் கட்டும்படி கூறினார். அத்திருவோட்டில் கிடைத்த பணத்தின் மூலம் அப்பக்தர், இவ்விடத்தில் கோயில் கட்டினார். மாம்பழத்திற்காக கோபம் கொண்டு சென்ற தண்டபாணி தங்கிய இடமென்பதால் இங்குபிரதானமாக மாம்பழ நைவேத்யம் படைத்து வணங்கப்படுகிறது. இவ்வாறு, வணங்குவதால் முருகன் நாம் வேண்டும் வரங்களை தருவார் என்பது நம்பிக்கை.  இவரது, அருளால்தான் சேலம் பகுதி மாம்பழ உற்பத்தியில் சிறந்து விளங்குவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. எனவே பக்தர்கள் இவரை, "மாம்பழ முருகன்' என்றும் அழைக்கிறார்கள்.



 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில், கையில் தண்டத்துடன் குபேர திசையை (வடக்கு) நோக்கியபடி தண்டபாணி அருளுகிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar