Special supplement · Part 3 · page 69 · 157 / 159
மதுரையின் தொன்மை
புராணம் முதல் சிற்றிலக்கியம் வரை மதுரையின் பெருமை, சொக்க நாதரின் மகிமையை பற்றி சொல் கிறது. இது குறித்து பார்ப்போம்.
சொக்கநாதர் மகிமையைச் சொல்லும் புராணங்கள்:
- திருவாலவாயுடையார் திருவி ளையாடல் புராணம். இந்த நூலின் ஆசிரியர் செல்லிநகர் பெரும்பற்றப்புலியூர் நம்பி. இந்நூலை பழைய திருவி ளையாடல் புராணம், வேம் பத்தூர் திருவிளையாடல் புராணம் என்றும் அழைப் பர். இது உத்திர மகாபுரா ணம் என்னும் சமஸ்கிருத நூலில் இருந்து மொழிபெ யர்க்கப்பட்டது.
- கடம்பவன புராணம். இந்த நூலின் ஆசிரியர் இலம்பூர் வீமநாத பண்டிதர். இது நீபாரண்ய மாஹத் மியம், கதம்பவன புராணம் என் னும் சமஸ்கிருத நூலில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.
- சுந்தரபாண்டியம். இந்நூலை அனதாரி என்னும் புலவர் இயற்றினார்.
- திருவிளையாடல்புராணம். இது பரஞ்ஜோதி முனிவரால் இயற்றப்பட்டது. இதுவே மக் கள் மத்தியில் பிரசித்த பெற்றது.
- அட்டமிப்பிரதட்சண மான்மியம். இதனை சமஸ்கிரு தத்தில் இருந்து தமிழில் வசன நடைக்கு மாற்றி அச்சிட்டு கொடுத்தவர் மதுரை ராமசாமி பிள்ளை.