Special supplement · Part 2 · page 32 · 39 / 159
நான்மாடக்கூடல்
ஒருசமயம் மதுரையை அழிக்க வருணன் ஏழு மேகக் கூட்டங்களை ஏவினான். அதை தடுக்குமாறு சிவபெருமான் தம் சடையில் இருந்த நான்கு மேகங்களுக்கும் கட்டளையிட்டார். உடனே அவை நான்கு மாடங்களாகக் கூடி மதுரை நகரை காத்தது. இதனால் இத்தலம் நான்மாடக்கூடல் எனப்பெயர் ஏற்பட்டது.