Special supplement · Part 1 · page 25 · 4 / 159
ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை
மதுரை நகரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலை மையமாக வைத்து உருவானது. தாமரை மலர் போல வடிக்கப்பட்ட இந்த நகரத்தின் நடுவில் கோயிலும், சுற்றியுள்ள இதழ்களாக தெருக்களும் அமைந்துள்ளது. இங்கு வந்த ஆதிசங்கரர், மீனாட்சி சன்னதியில் ஸ்ரீசக்ர பிரதிஷ்டை செய்து, பஞ்சரத்ன ஸ்தோத்திரம் பாடினார்.