Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ... மழை வேண்டி அரச வேப்ப மரத்துக்கு திருமணம் மழை வேண்டி அரச வேப்ப மரத்துக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தீ விபத்து
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தீ விபத்து

பதிவு செய்த நாள்

09 மார்
2020
11:03

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள பிரசாத ஸ்டால் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக கருதப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ராஜகோபுரம் வழியாக சென்றால் ரங்கா ரங்கா கோபுரம், வெள்ளை கோபுரம் மற்றும் கிழக்கு வாசல் ஆகியவற்றின் வழியாக தரிசனத்திற்கு செல்ல முடியும்.

பெரும்பாலும் அம்மா மண்டபத்திலிருந்து ராஜகோபுரம், ரெங்கா ரெங்கா கோபுரங்கள் வழியாகவே பக்தர்கள் ரெங்கநாதரை தரிசித்து வருவார்கள். இங்கு கருட மண்டபத்துக்கும் ஆரியப்பட்டால் வாசலுக்கும் இடைப்பட்ட மண்டபத்தில், கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாத ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு புளியோதரை, பொங்கல், தயிர், சாதம், வடை , லட்டு போன்ற பிரசாதங்கள் விற்பனை செய்யப்படும். இதற்கு அருகில், பக்தர்கள் வசதிக்காக ஏடிஎம் மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. அதிகாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இந்த பிரசாத ஸ்டால் முழுமையாக எரிந்து சேதம் அடைந்துள்ளது. ஏடிஎம் மையங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் திரை துணியால்  மறைப்பு ஏற்படுத்திவிட்டு,  பக்தர்களை அனுமதிக்காமல், கோவில் பணியாளர்கள் தீவிபத்து ஏற்பட்ட இடத்தை சுத்தம் செய்து, தண்ணீர் ஊற்றி கழுவி வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டு அதன் அடையாளமாக மண்டபம் பகுதியில் கரிப்புகை படிந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு பத்திரிகையாளர்களும் அனுமதிக்கப்படவில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி கலைமகள் சத்குரு தியாகராஜ சுவாமியின், 15ம் ஆண்டு ஆராதனை இசை விழா, வேதபுரீஸ்வர் ... மேலும்
 
temple news
பழநி: இரவு 10:00 மணிக்கு மேல் நடக்காதீர் என பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் நேற்று, இரண்டரை மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: பெருமணம் கிராமத்தில் உலக நலன் வேண்டி பெரியாண்டவருக்கு லட்சார்ச்சனை நடந்தது. சங்கராபுரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar