புத்தாண்டின் ராஜாவாக புதன் இருக்கிறார். அவருக்கு அதிதேவதையான மகாவிஷ்ணுவை ஆண்டு முழுவதும் வழிபட்டால் வெற்றி மேல் வெற்றி வரும். புதனன்று அதிகாலையில் நீராடி நெய்தீபம் ஏற்றி மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும். ஓம் நமோ நாராயணாய என்னும் மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும். விஷ்ணு சகஸ்ர நாமம், நாலாயிர திவ்ய பிரபந்தம் படிப்பது நல்லது.