நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை என்பார்கள். அதாவது சரணடைந்தவரை காக்க இன்றே ஓடி வருபவர் நரசிம்மர். விஷ்ணுவின் தசாவதாரங்களில் நான்காவது அவதாரம் நரசிம்மர். பிரகலாதன் என்னும் பக்தனை உடனடியாக காப்பாற்ற வேண்டும் என்பதற்காக துாணில் இருந்து வெளிப்பட்டார் நரசிம்மர்.
அசுரனான இரண்யனிடம் அவனது மகன் பிரகலாதன், பரம்பொருளான மகாவிஷ்ணு துாணிலும் இருக்கிறான்; துரும்பிலும் இருக்கிறான் என்றான்.. மகன் காட்டிய துாணைப் பிளக்க முயன்றான் இரண்யன். அதில் இருந்து கர்ஜித்தபடி சிங்க முகமும், மனித உடம்பும் கொண்டவராக நரசிம்மர் அவதரித்தார். கூரிய நகங்களால் அசுரனின் வயிற்றைக் கிழித்து குடலை மாலையாக அணிந்து கொண்டார். இவர் அவதார தினமான நரசிம்ம ஜெயந்தி இந்த ஆண்டு மே 6 ல் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சுவாமிக்கு பானகம் படைத்து வழிபட நீண்ட கால பிரச்னைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.