அழைக்கிறார் அரவிந்தர் * நமக்கு என்றும் துணையாக இருப்பவன் இறைவன் மட்டுமே. எப்போது அடிக்கவேண்டும், எப்போது அணைக்கவேண் டும் என்பதும் அவனே அறிவான். * நல்ல லட்சியத்தை நோக்கி வாழ்க்கைப் பாதையில் பயணம் செய்யுங்கள். அதை நிறைவேற்றத்தான் நாம் ஒவ்வொருவரும் இந்த பூமியில் பிறவி எடுத்திருக்கிறோம். * பயனற்ற பொருளற்ற வேதாந்தங்களைத் தூக்கி எறியுங்கள்.நம்மைத் தூய்மையாக்கும் பணியை இறைவனிடம் ஒப்படையுங்கள். * ஒழுக்கமாக வாழ்வதே இன்பத்திற்கான வழிமுறை. ஒழுக்கமே எல்லா நல்ல வழிகளையும் நமக்காக திறந்து விடும் சக்தி கொண்டது. * உத்தமமான செயல்களை தள்ளிப்போடவேகூடாது. செய்ய நினைத்தால் உடனடியாக செய்துவிடுவதே சிறந்தது. * மனிதர்களை நேசியுங்கள். அவர்களுக்கு தொண்டு செய்யுங்கள். ஆனால், பாராட்டை எதிர்பார்த்து எந்தச் செயலும் செய்யாதீர்கள். * சோர்வு என்பது உங்களிடமிருந்தால் நீங்கள் அதனை உதறித் தள்ளுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் எந்தக் காலத்திலும் முன்னேறவே முடியாது. * ஒவ்வொரு எண்ணமும், ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கவேண்டுமானால், நீங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் எந்தச் செயலையும் அணுகுங்கள்.