காரைக்குடி, : காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயிலில், உலக நன்மை வேண்டியும்,பெருந்தொற்று நோயிலிருந்து உலக மக்களை காக்க வேண்டியும் புத்தாண்டு நாளான நேற்று காலை 9:00 மணிமுதல் இரவு 8:00 மணி வரை ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. புத்தாண்டை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு, பூக்களால் அலங்கார ஆராதனை நடந்தது.