Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சவுடேஸ்வரி அம்மன்கோயில் திருவிழா திருவண்ணாமலையில் திருவள்ளுவர் தின உலா திருவண்ணாமலையில் திருவள்ளுவர் தின ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜனனம், ஞானம் தந்த ரமண மகரிஷி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2021
06:01

திருச்சுழி: திருச்சுழியில் அவதாரம் பூண்ட கருணை வடிவம், மதுரையில் ஞானம் பெற்ற மகான், திருவண்ணாமலையில் முக்தியடைந்த பரமாத்மா என ஜீவ ஒளி தத்துவமாக அருள்பாலித்து வருகிறார் ரமண மகரிஷி. அவரது அவதார தினமான டிச.,31ல் திருச்சுழி சுந்தர மந்திரம் கோயிலில் ரமண மகரிஷி ஜெயந்தி விழா கோலாகலமாக நடக்கிறது. ரமண மகரிஷியின் வாழ்க்கை முழுவதுமே அதிசயங்களும், ஆச்சரியங்களும், அற்புதங்களும் நிறைந்தவை. அருப்புக்கோட்டை அருகே திருச்சுழியில் சுந்தரம் அய்யர் - அழகம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்த ரமணருக்கு பெற்றோர் வைத்த பெயர் வெங்கடராமன் அய்யர். சிறு வயதிலே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட இவர் 12 வயதில் தந்தை மரணம் அடைந்தார். சித்தப்பா பொறுப்பில் வளர்ந்த ரமணர் 1891ல் மதுரை சென்றார்.

கல்வியில் நாட்டம் செல்லவில்லை. மீனாட்சி அம்மன் கோயிலில் அதிக நேரம் செலவிட்டார். நாயன்மார்கள் போல் நாமும் பக்தி செய்தால் இறைவன் நம் முன் தோன்றி தான் ஆக வேண்டும் என்ற எண்ணம் ரமணர் மனதில் ஆழமாக வேரூன்றியது. அவரின் உயர்ந்த எண்ணங்களால் 12 வயதில் ஞானம் பெற்று திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றார். குளத்தில் மூழ்கி எழுந்து கோவணம் மட்டுமே உடுத்தி யாரிடமும் தீட்சை பெறாமல் தன்னைத்தானே துறியாக ஆக்கி கொண்ட பரமாத்வானார். சதா இறைவனை துதித்தபடியே இருந்தார். பெரும்பாலான நேரங்களில் குகைக்குள் அமர்ந்து தியானம் செய்வதில் செலவிட்டார். ரமணர் புகழ் உலகளவில் பரவியது. அதிகம் பேசாமல் உலகை வென்றார். திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் 1950 ஏப்.,14ல் முக்தியடைந்தார். ரமண மகரிஷியின் ஜெயந்தி விழா திருச்சுழி ரமணரின் சுந்தர மந்திரம் (சுந்தரம் என்பது தந்தை பெயர் - மந்திரம் என்பது கோயில்) கோயிலில் டிச.,31ல் கோலகலமாக நடந்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: வளர்பிறை சஷ்டியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வைபவம் பகல் பத்து உற்சவத்தின் 6 ம் நாளில் ... மேலும்
 
temple news
அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று கொடியேற்றம் நடந்தது.பழமையான, அன்னூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar