நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30நவ 2021 02:11
நாமக்கல் : நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்ய விரும்பும் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு 18 அடி உயரத்தில் கம்பீர தோற்றத்தில் ஆஞ்சநேயர் நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார். ஆஞ்சநேயர் ஜெயந்தி, தமிழ் மாதம் முதல் ஞாயிறு, தமிழ், தெலுங்கு, ஆங்கில வருட பிறப்புகள், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஆஞ்சநேயருக்கு தங்கம், வெள்ளி, முத்தங்கி, வெற்றிலை மாலை உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படும். அதேபோல் குளிர் காலங்களான கார்த்திகை மார்கழி தை மாதங்களில் வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படும். பக்தர்கள் விரும்பினால் ஒரு நபருக்கு 15 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்தி தங்கள் பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான அறிவிப்பு கோவில் நிர்வாகம் சார்பில் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிச.5ல் நடப்பு ஆண்டின் முதல் வெண்ணைய் காப்பு அலங்காரம் சுவாமிக்கு செய்யப்படுகிறது. மேலும் விபரம் பெற 04286-233 999 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.