காரைக்கால்: காரைக்காலில் ஸ்ரீகயிலாசநாதர், ஸ்ரீநித்யக்கல்யாண பெருமாள் தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீஅண்ணாமலையார் ஆலய மகா கும்பாபிஷேக நேற்று சிறப்பாக நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில் அருள்மிகு ஸ்ரீகயிலாசநாதர். ஸ்ரீநித்யகல்யாணப் பெருமல் தேவஸ்தானத்திற்கு சொத்தமான ஸ்ரீ அண்ணாமலையார் ஆலயம்.பழமை வாய்ந்த கோவிலில் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி பாலாலயம் மற்றும் திருப்பணி தொடங்கியது. திருப்பணி முடிக்கப்பட்டது.பின்னர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 15ம் தேதி கணபதி ஹோமமும்,கடந்த 20ம் தேதி மாலை முதல் கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது. நேற்று அதிகாலை 4ம் கால யாகசாலை பூஜை மகா பூர்ணாகுதியுடன் நிறைவுபெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது.யாக சாலையில் பூஜித்த புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் ஏந்தி ஆலயத்தை வலம் வந்து வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க அனைத்து ஆலய விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது.அதை தொடர்ந்து ஸ்ரீஅண்ணாமலையார், ஸ்ரீஉண்ணாமலையம்மன் உள்ளிட்ட மூலவர்களுக்கு மகாபிஷேகமும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. இரவு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது.இதில் அறங்காவல் வாரிய தலைவர் வெற்றிச்செல்வம், துணை தலைவர் புகழேந்தி, திருப்பணிக்குழு தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.