கொண்டத்து காளியம்மன் கோவிலில் ரூ.13.84 லட்சம் காணிக்கை வசூல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஆக 2022 04:08
அனுப்பர்பாளையம்: திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. அறநிலையத்துறை திருப்பூர் மாவட்ட உதவி ஆணையர் செல்வராஜ், கோவில் தக்கார் பெரிய மருது பாண்டியன், செயல் அலுவலர் காளிமுத்து, ஊத்துக்குளி ஆய்வாளர் ஆதிரை, ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. திருப்பூர் மஹாவிஷ்ணு சேவா சங்கம், கே.எம்.சி பள்ளி மாணவர்கள் ஆகியோர் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், 13 லட்சத்து, 84 ஆயிரத்து, 264 ரூபாய், 137.500 மில்லி கிராம் தங்கம், 137.300 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.