திருச்செந்தூரில் சண்முகர் பச்சை சாத்தி வீதி உலா: நாளை 26 ல் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஆக 2022 08:08
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணி திருவிழாவில் நேற்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா வந்தார். நாளை 26ல் தேரோட்டம் நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 8ம் திருநாளான நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, காலை 6:15 க்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. சுவாமி சண்முகர் வெள்ளை நிற பட்டு அணிந்து வெள்ளை நிற மலர்கள் சூடி பெரிய வெள்ளி சக்கரத்தில் பிரம்ம அம்சமாக எழுந்தருளி வெள்ளை சாத்திக்கோலத்தில் வீதி உலா வந்து மேலக் கோயில் அடைந்தார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. பச்சை சாத்தி மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். அங்கு அபிஷேகம் அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. பகல் 11:10 மணிக்கு சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை நிற பட்டாடை அணிந்து பச்சை நிற மலர்கள் சூடி பெருமாள் அம்சமாக பச்சை சாத்திக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். ஆவணி திருவிழாவின் 10ம் நாளான நாளை 26ல் காலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.