Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகுண்ட ஏகாதசி : முப்பத்து முக்கோடி ... மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய..!
முதல் பக்கம் » துளிகள்
வைகுண்டப் பதவி தரும் வைகுண்டன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2023
02:01

கிருதயுகத்தில் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான் முரன் எனும் அசுரன். இதனால் கஷ்டப்பட்டவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அவரோ திருமாலிடம் சரண்புகுமாறு அறிவுறுத்தினார். இப்படி இவர்கள் திருமாலிடம் சரணடையவே, அவர் அசுரனுடன் போரிடத் துவங்கினார். இறுதியில் அசுரனது   படைக்கலன்களை எல்லாம் அழித்தார். பின் அவன் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று எண்ணினார் திருமால். அதன்படி போர்க்களத்தில் இருந்து வெளியேறி, பத்ரிகாஸ்ரமத்தில் இருந்த ஒரு குகையில் போய் ஓய்வெடுத்தார். அப்போதும் அவன் திருந்தவில்லை. மனம் வருந்தவில்லை. பகவானைக் கொல்ல குகைக்கே வந்துவிட்டான். பாவம்! அவன். மாயங்கள் செய்வதில் வல்லவரான திருமால், உறங்குவதாக நினைத்து வாளை ஓங்கினான். அப்போது திருமாலின் சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இந்த சக்தியை சாதாரணமாக நினைத்த அசுரன், ‘உன்னைக் கொல்ல ஓர் அம்பே போதும்’ என்று அம்பை எடுத்தான். அப்போது அந்தப் பெண் எழுப்பிய ஒலியால், அசுரன் சாம்பலாகினான். அதே நேரத்தில் ஏதுமறியாதவர்போல் கண்விழித்த பகவான், அந்த சக்தியை பாராட்டினார். அதோடு அவளுக்கு ஏகாதசி என்ற பெயரை சூட்டி, ‘‘நீ தோன்றிய இந்நாளில் விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு, வைகுண்ட பதவியையும் கொடுப்பேன்’’ என்று அருளினார்.

 
மேலும் துளிகள் »
temple news
சிவனின் அவதாரங்களில் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவர் அம்சம். எட்டு திக்கும் காக்கும் காவல் ... மேலும்
 
temple news
வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்களின் முதல் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். ஒரு தடவை விஷ்ணுபதி ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 
temple news
முற்காலத்தில் வைசியன் ஒருவன் மிகவும் ஏழ்மையான நிலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அன்றாட ... மேலும்
 
temple news
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும்  வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. சயம் என்றால் தேய்தல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar