சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசித்தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2023 08:03
சிங்கம்புணரி: சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசித் தேரோட்டம் நடந்தது.
இன்று காலை 9:00 மணிக்கு சுவாமி அம்பாளுடன் திருத்தேரில் எழுந்தருளினார். மாலை 3:30 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தேரோட்டத்தை துவக்கி வைத்தார். விநாயகர், சுப்ரமணியர் சிறிய தேர்களில் முன்னே செல்ல, பெரிய தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். தொடர்ந்து அம்பாள், சண்டிகேஸ்வரர் சப்பரங்கள் சென்றது. வழி நெடுகிலும் பெண்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 6:30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. திருப்புத்தூர் டி.எஸ்.பி ஆத்மநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.