அவிநாசி: மஹோத்ஸவ பயிற்சி நற்சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடல்நல அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு பெங்களூர் வாழும் கலை நிறுவனர் வேத விஞ்ஞான மஹாவித்யா பீடத்தின் ஸ்தாபகசார்யர் பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியால் நிறுவப்பட்ட வேத ஆகம மஹா பாடசாலையில் வேதம் பயின்ற ஸ்ரீஸ்ரீ குருகுலத்தைச் சேர்ந்த 25 மாணவர்கள் வேதசிவாகம திருமுறை கல்வி பயின்று 25. 04.2023 முதல் 08.05.2023 வரை நடைபெற்ற தேர் திருவிழாவில் மஹோத்ஸவத்தில் பயிற்சி பெற்ற 16ம் பிரிவு மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் விழா பாடசாலை முதல்வர் அவிநாசி சுந்தரமூர்த்தி சிவாச்சார்யார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சுமதி குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார்.விழாவை, கொடுமுடி பிரகாஷ் சிவம் தொகுத்து வழங்கினார். விழாவுக்கு வருகை தந்திருந்த விருந்தினர்களை வேத ஆகம மஹா பாடசாலை ஸ்ரீ ஸ்ரீ குருகுலத்தின் முதல்வர் சுந்தரமூர்த்தி சிவாச்சார்யார் வரவேற்று சிறப்பித்தார். 16ம் பிரிவு மாணவர்களுக்கு, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் காமாட்சி தாச சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.இதில் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் குருத்துவம் முதல் ஸ்தானிகம் சிவக்குமார் குருக்கள் அனைவருக்கும் பரிசு வழங்கி கௌரவித்தார்.அவிநாசி கோவிலில் பெருமைகளையும் சைவ நெறிகளையும் மாணவர்களுக்கு நாகராஜ் சிறப்புரையாற்றினார். மேலும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பிரதான ஆசார்யார் ஹாலாஸ்ய நாத பட்டர் மாணவர்களை வாழ்த்தினார்.