சோழவந்தான் வைகை ஆற்றில் பச்சை பட்டில் இறங்கிய அழகர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2024 04:04
சோழவந்தான்; சோழவந்தான் வைகை ஆற்றில் இன்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பச்சை பட்டுடன் இறங்கிய அழகரை பக்தர்கள் தரிசித்தனர். சோழவந்தான் ஜெனக நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா 5 நாட்கள் நடக்கிறது. மூன்றாம் நாளான இன்று காலை 5:40 மணிக்கு சுவாமி அழகர் திருக்கோலத்தில் பச்சை பட்டு உடுத்தி வெண்குதிரையில் எழுந்தருளினார். சனீஸ்வர பகவான் கோவயிலில் அழகருக்கு எதிர்சேவை நடக்க, மாலை மாற்றுதல் பரிவட்டம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் புடை சூழ வைகை ஆற்றில் காலை 8:50 மணிக்கு இறங்கினார். அழகர் வேடம் பூண்ட பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சினர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.