கோட்டையம்மன் கோவிலில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2024 11:07
தேவகோட்டை; தேவகோட்டை காவல் தெய்வமான கோட்டையம்மன் கோவில் ஆடித்திருவிழா 22 ம் தேதி மேடை போடுதல் 23 ந்தேதி காப்புகட்டுதல் மற்றும் முதல் பொங்கலுடன் தொடங்கியது. ஒரு வாரம் தினமும் அம்மன் முன்பு பலிபீடத்திற்கு காலை மாலை சிறப்பு அபிஷேகங்கள் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆடி இரண்டாம் செவ்வாய்க்கிழமையான நேற்று அம்மனுக்கு கண் திறக்கப்பட்டது சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தன. மதியம் 12: 00 மணியளவில் புள்ளிப் பொங்கலாக கோவிலில் வைக்கப்பட்டது தொடர்ந்து தேவகோட்டை நகரத்தைச் சேர்ந்த பெண்கள் சுமார் இரண்டாயிரம் பேர் ஒரே நேரத்தில் கோவிலைச் சுற்றிலும் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து பெண்கள் இரவு வரை பொங்கல் வைத்தும் , மாவிளக்கு ஏற்றியும் அம்மனை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனாக 108, 1008 என கோவிலை சுற்றி வந்து வழிபட்டனர். வெள்ளிக்கிழமை விளக்கு பூஜை நடைபெறுகிறது.