Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் ... திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக விழா துவக்கம் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நயினார்கோவில் நாகநாதசுவாமி வைகாசி வசந்த விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
நயினார்கோவில் நாகநாதசுவாமி வைகாசி வசந்த விழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

31 மே
2025
04:05

நயினார்கோவில்; பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் வைகாசி வசந்த உற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பரமக்குடியில் இருந்து 12 கி.மீ., தொலைவில் நயினார்கோவில் உள்ளது. 

இங்கு சவுந்தர்யநாயகி நாகநாத சுவாமி அருள் பாலிக்கின்றனர். கோயிலில் மே 30 இரவு அணுக்கை, வாஸ்து சாந்தி நடந்தது. இன்று காலை சுவாமி சன்னதியில் 8:30 மணிக்கு நந்தி கொடியேற்றப்பட்டு வசந்த விழா துவங்கியது. பின்னர் அபிஷேகம், மகாதீப ஆராதனை நடத்தப்பட்டது. இரவு சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்தார். தினமும் காலை, இரவு இந்திர விமானம், நந்தீஸ்வரர், ஹம்சம், பூத, சிம்ம, யானை, கைலாச, கிளி வாகனங்களில் சவுந்தர்யநாயகி மற்றும் பிரியா விடையுடன் நாகநாத சுவாமி வீதி உலா வர உள்ளனர். ஜூன் 5 காலை திருஞானசம்பந்தருக்கு திருமுலைப்பால் ஊட்டல் நிகழ்ச்சி நடக்கிறது. ஜூன் 7 நடராஜர் இந்திர விமானத்தில் வலம் வருகிறார். அன்று திருமுறை பட்டயம் வாசித்தல், ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமி திரு ஊடல் தீர்த்தல் வைபவம் நடக்கிறது. தொடர்ந்து வெள்ளி குதிரை வாகனத்தில் சுவாமி அருள்பாலிக்கிறார். ஜூன் 8 காலை 9:00 மணிக்கு மேல் சுவாமி தேரில் அமர்ந்து நான்கு மாட வீதிகளில் வலம் வருகிறார். இரவு சேஷ, காமதேனு வாகனங்களில் புறப்பாடு நடக்கும். ஜூன் 9 காலை தீர்த்தவாரி, இரவு சப்தாவர்ணம் நடக்க உள்ளது. தொடர்ந்து கங்காள நாதர், சண்டிகேஸ்வரர் விழாவும், ஜூன் 12 காலை உற்சவ சாந்தியுடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேலூர்; திருவாதவூரில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருமறைநாதருக்கு வேதநாயகி அம்பாள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 
temple news
மறைமலை நகர்; பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில், வைகாசி மாத தேரோட்டம் விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், 400 கோடி ரூபாய் மதிப்பில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான மலை மேலுள்ள காசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar