போடி; போடி சுப்பிரமணியர்சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று முருகன், வள்ளி, தெய்வானைக்கு தங்க கவச அலங்காரத்தில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. போடி சுப்பிரமணியர்சுவாமி கோயிலில் வைகாசி விசாகம் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். இன்று காலை பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்தனர். முருகனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. தங்க கவச அலங்காரத்தில் முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. சுவாமி அலங்காரத்தினை விக்னேஸ்வர கந்த குருக்கள் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியின் தரிசனம் பெற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டன.