விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் கடந்த ஒரு மாதத்திற்கான உண்டியல் வசூல் எண்ணும் பணி நேற்று காலை 9 மணிக்நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், துணை ஆணையர் சிவலிங்கம் முன்னிலையில் கோவில் ஊழியர்கள், சேவார்த்திகள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.1 கோடியே 30 லட்சத்து 99 ஆயிரத்து 432 ரூபாய் ரொக்கமும், 174 கிராம் தங்கம், 1கிலோ 364 கிராம் வெள்ளி நகைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். அறங்காவலர்கள் மதியழகன், சுரேஷ், ஏழுமலை,பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம், ஆய்வாளர் சங்கீதா, கண்காணிப்பாளர் பாக்கியலட்சுமி, மேலாளர்கள் சதீஷ், மணி ஆகியோர் உடன் இருந்தனர்.