Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி சனி: திருக்கோஷ்டியூர் ... பிதுர் வழிபாட்டுக்குரிய மகாளய அமாவாசை; முன்னோரை வணங்கி வழியனுப்புவோம்.. வாழ்வில் முன்னேறுவோம்..! பிதுர் வழிபாட்டுக்குரிய மகாளய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி சனிக்கிழமை; கோவை பெருமாள் கோயில்களில் வழிபாடு
எழுத்தின் அளவு:
புரட்டாசி சனிக்கிழமை; கோவை பெருமாள் கோயில்களில் வழிபாடு

பதிவு செய்த நாள்

20 செப்
2025
05:09

கோவை; புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால், எல்லாவித கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. புரட்டாசி முதல் சனி உற்சவத்தை முன்னிட்டு இன்று கோவையில் உள்ள பெருமாள் கோயில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.


பெரிய கடை வீதியில் உள்ள லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி, உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோயில்களில் இன்று அதிகாலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. 19 வகையான வாசனை திரவியங்கள் சேர்க்கப்பட்ட புனிதநீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெண்கள், விளக்கேற்றி வழிபட்டனர். பக்தர்கள் சிரமமின்றி வழிபாடு செய்ய, கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோவை கொடிசியா அருகில் உள்ள ஸ்ரீ வேங்கடாசலபதி கோயிலில் சுவாமிக்கு, சர்வ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விளாங்குறிச்சி ரோடு விநாயகபுரம் ஸ்ரீ வாமன பெருமாள் கோயிலில் திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரத்தில் காட்சியளித்தார். பாப்பநாயக்கன்பாளையம் சீனிவாச பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் காட்சியளித்தார்.


ராம்நகர் ஸ்ரீ கோதண்டராமசுவாமி கோயிலில், ராமபிரான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். சித்தாபுதுார் ஜெகன்நாத பெருமாள், சலீவன் வீதி வேணுகோபால சுவாமி, கோட்டைமேட்டில் உள்ள கரிவரதராஜ பெருமாள், பேரூர் பச்சாபாளையத்தில் உள்ள தசாவதார பெருமாள், கோவைப்புதுாரில் உள்ள பெருமாள் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


தொண்டாமுத்துார்; தொண்டாமுத்துார் அரங்கநாதர் கோயிலில், இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை 5 மணிக்கு, கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டு, திருமஞ்சனம், அபிஷேக ஆராதனை நடந்தது. பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. தொடர்ந்து 12.30 மணிக்கு, அரங்கநாத பெருமாள் வீதி உலா நடந்தது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்தனர். வடவள்ளி கரிவரதராஜ பெருமாள் கோயில், பொம்மணம்பாளையம் ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், சுண்டபாளையம் வரதராஜ பெருமாள் கோயில், கொங்கு திருப்பதி கோயில் என, அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 
temple news
தேவகோட்டை: கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23ம் தேதி காப்புக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar