Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி சனி: திருக்கோஷ்டியூர் ... பிதுர் வழிபாட்டுக்குரிய மகாளய அமாவாசை; முன்னோரை வணங்கி வழியனுப்புவோம்.. வாழ்வில் முன்னேறுவோம்..! பிதுர் வழிபாட்டுக்குரிய மகாளய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி சனிக்கிழமை; கோவை பெருமாள் கோயில்களில் வழிபாடு
எழுத்தின் அளவு:
புரட்டாசி சனிக்கிழமை; கோவை பெருமாள் கோயில்களில் வழிபாடு

பதிவு செய்த நாள்

20 செப்
2025
05:09

கோவை; புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால், எல்லாவித கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. புரட்டாசி முதல் சனி உற்சவத்தை முன்னிட்டு இன்று கோவையில் உள்ள பெருமாள் கோயில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.


பெரிய கடை வீதியில் உள்ள லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி, உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோயில்களில் இன்று அதிகாலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. 19 வகையான வாசனை திரவியங்கள் சேர்க்கப்பட்ட புனிதநீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெண்கள், விளக்கேற்றி வழிபட்டனர். பக்தர்கள் சிரமமின்றி வழிபாடு செய்ய, கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோவை கொடிசியா அருகில் உள்ள ஸ்ரீ வேங்கடாசலபதி கோயிலில் சுவாமிக்கு, சர்வ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விளாங்குறிச்சி ரோடு விநாயகபுரம் ஸ்ரீ வாமன பெருமாள் கோயிலில் திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரத்தில் காட்சியளித்தார். பாப்பநாயக்கன்பாளையம் சீனிவாச பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் காட்சியளித்தார்.


ராம்நகர் ஸ்ரீ கோதண்டராமசுவாமி கோயிலில், ராமபிரான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். சித்தாபுதுார் ஜெகன்நாத பெருமாள், சலீவன் வீதி வேணுகோபால சுவாமி, கோட்டைமேட்டில் உள்ள கரிவரதராஜ பெருமாள், பேரூர் பச்சாபாளையத்தில் உள்ள தசாவதார பெருமாள், கோவைப்புதுாரில் உள்ள பெருமாள் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


தொண்டாமுத்துார்; தொண்டாமுத்துார் அரங்கநாதர் கோயிலில், இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை 5 மணிக்கு, கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டு, திருமஞ்சனம், அபிஷேக ஆராதனை நடந்தது. பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. தொடர்ந்து 12.30 மணிக்கு, அரங்கநாத பெருமாள் வீதி உலா நடந்தது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்தனர். வடவள்ளி கரிவரதராஜ பெருமாள் கோயில், பொம்மணம்பாளையம் ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், சுண்டபாளையம் வரதராஜ பெருமாள் கோயில், கொங்கு திருப்பதி கோயில் என, அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: மாடூர் டோல்கேட் அருகே நிறைமதி சாலையில் உள்ள பஞ்சமுக மஞ்சள் வாராஹி அம்மன் கோவிலில், ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார், கூத்தப்பாக்கம் சர்வசக்தி விநாயகர் கோவிலில் முதலாமாண்டு பூர்த்தி சிறப்பு பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar