Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூர் தங்க விமான ... சக்தி மாரியம்மனுக்கு பால்குட ஊர்வலம் சக்தி மாரியம்மனுக்கு பால்குட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருநகர் செய்யாற்றில் தைப்பூசவிழா விமரிசை
எழுத்தின் அளவு:
பெருநகர் செய்யாற்றில் தைப்பூசவிழா விமரிசை

பதிவு செய்த நாள்

03 பிப்
2026
02:02

உத்திரமேரூர்: பெருநகர் செய்யாற்றில், தைப்பூச ஆற்று திருவிழா நேற்று அதிகாலை விமரிசையாக நடந்தது.


உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகரில் பட்டவதனாம்பிகை சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நடப்பாண்டிற்கான தைப்பூசம் திருவிழா, ஜன., 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.


ஐந்தாம் நாளான ஜன., 27ல், திருக்கல்யாண உத்சவமும், 29ல் தேரோட்டம் விழாவும், ஒன்பதாம் நாள் உத்சவமான 31ம் தேதி, 63 நாயன்மார்கள் உத்சவமும் நடந்தது. 10ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம், பெருநகர் சுற்றி உள்ள 22 கிராம சுவாமிகள் நள்ளிரவில் அப்பகுதி செய்யாற்றில் வந்தடைந்தனர்.


காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பெருநகர், மானாம்பதி, இளநகர், மேல்பாக்கம், விசூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆக்கூர், வெங்கடாவரம், மடிப்பாக்கம், தேத்துறை, கீழ்நீர்குன்றம், இளநீர்குன்றம், உக்கல், சேத்துப்பட்டு, கூழமந்தல், அத்தி, மகாஜனம்பாக்கம் உள்ளிட்ட 22 கிராம கோவில் சுவாமிகள், செய்யாற்றில் ஒன்றாக சங்கமித்தனர்.


அதை தொடர்ந்து, அதிகாலை 5:00 மணிக்கு, சுவாமிகள் ஆற்றுக்குள் இறங்கி, பக்தர்களுக்கு தைப்பூச தரிசனம் அளித்தனர். பின், அந்தந்த ஊர் கோவில்களுக்கு, சுவாமி புறப்பாடு நடந்தது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar