மாரியூரில் புதியதாக வெள்ளிக்கிழமை தோறும் ஊஞ்சல் உற்ஸவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2026 10:05
சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூரில் பழமையும் புரதான சிறப்பும் பெற்ற பூவேந்தியநாதர், சிவன் கோவில் உள்ளது. மன்னார் வளைகுடா அருகே உள்ள கடற்கரை கோயிலாக விளங்குகிறது. வருண பகவானால் பூஜிக்கப்பட்ட இடமாகும். இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். இங்கே சித்ரா பவுர்ணமி அன்று நடக்கக்கூடிய வலை வீசும் படலம் சிறப்பு வாய்ந்ததாகும். இங்கு நேற்று முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் பவள நிறவல்லியம்மனுக்கு ஊஞ்சல் சேவை உற்ஸவம் துவங்கப்பட்டுள்ளது. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மாலை 6:00 மணி முதல் ஊஞ்சல் உற்ஸவம் நடக்க உள்ளது. பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் பவளம் மகளிர் குழுவினர் செய்து வருகின்றனர்.