*நாம் செலுத்தும் பணிவுக்கும், மரியாதைக்கும் பிரதிபலனாக கடவுள் ஏதாவது நன்மை தரவேண்டும் என்று எதிர்பார்க்கும்வரை உண்மையான பக்தி ஏற்படாது. *கடைநிலையில் வாழும் மனிதனுக்கும் உணவு கிடைக்கவேண்டும். பசித்தவனுக்கு உணவளிப்பது தான் என்னுடைய ஆன்மிகம். அதை தவிர மற்றதெல்லாம் பொய்யே. *அரசியல், சமுதாயத்தில் சுதந்திரத்தை நாம் பெற்றிருக்கலாம். ஆனால், ஆத்திரம், ஆசை இவற்றுக்கு அடிமையாக இருக்கும் வரை சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடியாது. *இந்த உலகம் பெரிய உடற்பயிற்சி சாலை. நாம் அனைவரும் வலிமையுள்ளவர்களாக்கிக் கொள்ளவே இங்கு வந்திருக்கிறோம். *நீங்கள் உலகில் பிறந்திருப்பது வெல்தற்காகவே. வெறும் கோழைத்தனத்தால் யாருக்கும் பணிந்து போவதற்கு அல்ல. *நம்முடைய வழிபாட்டில் கடவுளை நம் தாய் தந்தையராக ஒப்புக் கொள்கிறோம். ஆனால். அன்றாட வாழ்விலோ நாம் சந்திக்கும் அனைவரையும் எதிரிகளாக நினைக்கிறோம். *உயிர்கள் அனைத்தும் கடவுளின் பிள்ளைகள் என்பது உண்மையானால் நாம் காணும் மனிதர்கள் எல்லாருமே நம் சகோதரர்கள் என்பதும் நிஜம் தானே! *அந்தக்காலத்தில் கடவுளை நம்ப மறுப்பதே நாத்திகம். இப்போதோ தன்னை நம்ப மறுப்பவனே நாத்திகவாதி. தன்னம்பிக்கையோடு இருப்பதே உண்மையான ஆத்திகம். *அன்பு காட்டுவதே செயல்களில் எல்லாம் சிறந்த செயல். யோகத்தை விட அன்பே மேலானது. தலைசிறந்த ஞானமும் அதுவே. *உள்ளங்களை திறந்து வையுங்கள். பிரபஞ்சத்தில் உள்ள நல்ல எண்ணங்கள் அனைத்தும் நம்மை வந்து சேரட்டும். *நேர்மையான கோபம் என்று ஒன்று கிடையாது. பேராசையே கோபத்திற்கு அடிப்படைக் காரணம். அன்பு நெஞ்சத்தில் கோபத்திற்கு இடமே இருப்பதில்லை. *அடக்கப்படாத மனம் மனிதனை எப்போதும் கீழ்நோக்கியே இழுத்துச் சென்று பாதாளத்தில் ஒருவனைத் தள்ளிவிடும். *பொன், பெண், மண் இவைகளுக்கு வசப்பட்ட அற்ப மனிதர்களைப் பொருட்படுத்தக் கூடாது. *யாருடைய உள்ளம் ஏழை மக்களுக்காகத் துயரத்தில் ஆழ்ந்துவிடுமோ, அவரையே மகாத்மாவாக நான் வணங்குகிறேன். *வேடதாரியாகப் பொய் சொல்லி வாழ்வதை விட, உண்மை எங்கு இழுத்துச் சென்றாலும் தப்பில்லை என்று வாழ்வதே உயர்ந்தபண்பாகும். *முதலில் பணியாளனாக வேலை செய்யக் கற்றுக்கொள். எஜமானராக வாழும்தகுதி தானாக உன்னைத் தேடி வரும். *நன்மை விளையும் என்று உணர்ந்தால் மட்டுமே, மனதில் உள்ள அந்தரங்க விஷயங்களைப் பிறரிடம் சொல்லலாம். *பிறருக்காகச் செய்யும் சிறு முயற்சி கூட நமக்குள் இருக்கும் பேராற்றலைத் தூண்டி விடும். *தான் ஈடுபடும் எந்தப் பணியையும் தன் விருப்பத்திற்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்பவனே சிறந்த அறிவாளியாவான். *யாரிடமும் பொறாமை கொள்ளாதீர்கள். அனைவரையும் நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள். நன்மை செய்வோர் அனைவருக்கும் கைகொடுக்கத் தயங்காதீர்கள். *மனதை அடக்கப் பழகியவன் வேறு எதற்கும் எளிதில் வசப்பட மாட்டான். அத்தகையவன் சிறந்த அறிவாளியாகவும் திகழ்வான்.