Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வில்லிவாக்கத்தில் நாச்சியர் ...  பிள்ளையார்பட்டி கொங்கு நாச்சியம்மன் கோயில் வைகாசி செவ்வாய் உற்ஸவம் பிள்ளையார்பட்டி கொங்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் வியாபாரிகள் தொல்லையால் பக்தர்கள் அதிருப்தி
எழுத்தின் அளவு:
 திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் வியாபாரிகள் தொல்லையால் பக்தர்கள் அதிருப்தி

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2026
06:06

திருவாலங்காடு: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் நுழைவாயிலில், கீரை, காய்கறிகள் விற்கும் உள்ளூர் வியாபாரிகள், பொருட்களை வாங்கக்கூறி தொல்லை செய்வதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடில் அமைந்துள்ளது.

இந்த கோவிலுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து, தினமும் 1,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து, சுவாமியை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த கோவில் வளாகத்தில் உள்ள கோசாலை எனும் கால்நடைகளை பாதுகாக்கும் மையத்தில், 40க்கும் மேற்பட்ட பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அந்த பசுக்களுக்கு உணவாக வழங்கும் அருகம்புல் மற்றும் காய்கறிகளை, கோவில் வாசலில் வைத்து, உள்ளூர் வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

தற்போது, கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்களிடம், கட்டாயமாக அருகம்புல் அல்லது காய்கறியை வாங்க வேண்டும் என, வியாபாரிகள் தொந்தரவு செய்வதால், பக்தர்கள் எரிச்சல் அடைகின்றனர். பொருட்களை வாங்க மறுக்கும் பக்தர்களை, தகாத வார்த்தைகளால் வசைபாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். நேற்று முன்தினம் கோவிலுக்கு சென்னையில் இருந்து வந்த பக்தகர்கள், கீரை, காய்கறிகளை வாங்காததால், வழக்கம் போல வியாபாரிகள் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனால் மனம் நொந்த பக்தர்கள், அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவில் நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் வந்து சமரசம் செய்தனர். பின், கோவில் வளாகத்தில் பக்தர்களை தொந்தரவு செய்யக் கூடாது என, வியாபாரிகளை போலீசார் எச்சரித்தனர்.இருப்பினும், உள்ளூர் வியாபாரிகள் தொடர்ந்து பக்தர்களை தொந்தரவு செய்து, கோவில் வளாகத்தில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால், பக்தர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாக வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, திருத்தணி கோவில் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 வில்லிவாக்கம்: வைகாசி பெருவிழாவை முன்னிட்டு, உற்சவர் சவுமிய தாமோதர பெருமாள், நாச்சியார் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலின் உபகோயிலான கொங்குநாச்சியம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்: நாகையில், கட்டுமானப் பணியின் போது கண்டெடுக்கப்பட்ட பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஐம்பொன் ... மேலும்
 
temple news
சென்னை;  சென்னை பெசன்ட் நகர் ஊரூர் குப்பம் - ஆல்காட் குப்பம் பகுதியில் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவில் ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar