Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடுகபட்டியில் அம்மன் கோயில் உற்ஸவ ... புதுச்சேரி செங்கழுநீர் அம்மன் கோவிலில் 108 சங்கு அபிஷேகம் புதுச்சேரி செங்கழுநீர் அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2026
10:06

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆணி திருமஞ்சன தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.


கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற, பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் நடராஜர் கோயிலில், ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக பல்வேறு சிறப்பு வழிபாடுகளுக்கு பின் வேதமந்திரம் முழங்க தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


பத்து நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தை தொடர்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெறும். நாளை 14 ம் தேதி சந்திர பிரபை வாகன வீதி உலா, 15 ம் தேதி தங்க சூரிய பிரபை வாகன வீதிஉலா, 16 ம் தேதி வெள்ளி பூதவாகன வீதிஉலா, 17 ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதி உலா (தெருவடைச்சான்), நடைபெறுகிறது. தொடர்ந்து 18 ம் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலாவும்,19 ம் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலாவு, 20 ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடைபெற உள்ளது. முக்கிய விழாவான தேர் திருவிழா வரும், 21ம் தேதியும், 22 ஆம் தேதி தரிசன விழாவும் நடைபெற உள்ளது. தேர் திருவிழா என்று தேர் வீதி உலா முடிந்த பின்பு அன்று இரவு 8 மணிக்கு, தேரிலிருந்து நடராஜர் சிவகாமசுந்தரி இறங்கி கீழ சன்னதி வழியாக ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளி செய்து, ஏக கால லட்சார்ச்சனை நடைபெறும். அதனைத் தொடர்ந்து தரிசன விழா நடைபெறும் 22 ஆம் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு, ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரிக்கு மகா அபிஷேகம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பின்னர் மதியம், பஞ்சமூர்த்தி வீதிஉலா சென்று வந்த பின், சுமார் 3 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனம் தரிசனம் நடைபெற உள்ளது. அதன் பின்னர் ஞானகாச சித்சபா பிரவேசம் நடைபெறும். 23 ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று, வைகாசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
புதுச்சேரி: வாழைக்குளம் செங்கழுநீர் அம்மன் கும்பாபிஷேக துவக்க விழாவையொட்டி,108 சங்கு அபிஷேகம் நேற்று ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் மகா ... மேலும்
 
temple news
கோவை; கோவை சிவானந்தா காலனி ரயில்வே பாலம் அருகே உள்ள ஸ்ரீ மதுரை வீரன் கோயில் 50 ம் ஆண்டு பொன்விழா ... மேலும்
 
temple news
செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் மதில் சுவர் கட்டும் பணியை உதவி ஆணையர் ஆய்வு செய்தார்.செஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar