நீர் நிலைகளை பாதுகாக்க.. ராமேஸ்வரத்தில் சர்வ தீர்த்த மகா சங்கம திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூன் 2026 10:06
ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் விவேகானந்தா கேந்திர சார்பில் சர்வ தீர்த்த மகா சங்கம் திருவிழா நடந்தது.
பசுமை ராமேஸ்வரம், விவேகானந்தா கேந்திரா தீர்த்த மித்ரா குழு இணைந்து புனித தீர்த்தங்கள், நீர் நிலைகளை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து ராமேஸ்வரம் தீவை சுற்றியுள்ள 20 கிராமத்தில் உள்ள 51 தீர்த்தங்களை பக்தர்கள் புனித கலசத்தில் சேகரித்து ராமகிருஷ்ண மடத்தில் வைத்தனர். பின் நேற்று அங்கிருந்து பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து சென்று கோயில் அக்னி கடற்கரையில் வைத்து சிறப்பு அபிஷேகம், பூஜை செய்து கடலில் 51 தீர்த்தங்களை ஊற்றி சர்வ தீர்த்த மகா சங்கம திருவிழா விமரிசையாக நடந்தது. இதன்பின் அக்னி தீர்த்த கடற்கரையில் மகா தீபாரதனை நடந்தது. இதில் பசுமை ராமேஸ்வரம் நிர்வாகி சரஸ்வதியம்மா, ராமேஸ்வரம் காஞ்சி மடம் முன்னாள் மேலாளர் சுந்தரவாத்தியார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.