பதிவு செய்த நாள்
18
மார்
2013
11:03
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், பங்குனி முதல் ஞாயிற்றுக்கிழமையொட்டி, நேற்று, சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. நாமக்கல் நகரின் மையத்தில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், தமிழகம் மட்டும் அல்லாமல், பிற மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து, ஸ்வாமியை வழிபட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒவ்வொரு விசேஷ தினத்தன்றும், ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதன்படி, நேற்று, பங்குனி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. சிறப்பு அலங்காரத்தில், ஸ்வாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். "அடுத்த மாதம் தமிழ் புத்தாண்டான, ஏப்ரல், 14ம் தேதி, முதல் ஞாயிற்றுக்கிழமை வருவதால், அன்று அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.