கனவில் யானை விரட்டுவது போல இருக்கிறது! நல்லது தானா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2013 04:06
பிள்ளையாருக்குக் குறை உள்ளது. தேங்காய் உடைத்து கொழுக்கட்டை நிவேதனம் செய்யவேண்டும் என்பது பொதுவாக மரபில் உள்ள விஷயம். டிவி பார்ப்பது, புத்தகம் படிப்பது, பிறர் கூறும் விஷயங்களைக் கேட்பது போன்றவற்றில் சில செய்திகள் நம் ஆழ்மனதில் பதிந்து தூக்கத்தில் கனவாக வெளிப்படுகிறது. இதனால், கவலைப்படவோ, பயப்படவோ வேண்டாம். இதைப் பெரிய விஷயமாகப் பலரும் என்னிடம் நேரிலும், கடிதம் மூலமும் கேட்டுக் கொண்டே இருப்பதால் சொல்கிறேன். நல்ல விஷயங்களை மட்டும் பாருங்கள், படியுங்கள், கேளுங்கள். இனிய கனவுகள் வந்து உங்களை மகிழ்விக்கும்.