ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் நித்தீஸ்வரர் சுவாமி கோவிலில் மகா சனிப்பிரதோஷ விழா நடந்தது. மகா சனிப்பிரதோஷ விழாவையொட்டி பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. திக்பாலகர்களுக்கு 8 தீப ஆராதனைகள், நந்திகேஸ்வரருக்கு 11 அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் சுவாமி உள்பிரகார உலா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் குருக்கள் ரவிசுந்தர், ஜெய்சங்கர் செய்திருந்தனர்.