Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தீபத் திருவிழா முடிந்ததை முன்னிட்டு ... ராமேஸ்வரம் கோவில் யானைக்கு மணி மண்டபம் ராமேஸ்வரம் கோவில் யானைக்கு மணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் டிச., 26-ல் மண்டல பூஜை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 டிச
2013
10:12

சபரிமலை: "சபரிமலையில் வரும் 26ம் தேதியிலும், தமிழகத்தில் 27லும் மண்டலபூஜை நடைபெறுகிறது. பக்தர்கள் சபரிமலை மண்டலபூஜை தேதியை கருத்தில் கொண்டு பயணத்தை வகுக்க வேண்டும் என்று தேவசம்போர்டு கேட்டுக்கொண்டுள்ளது. கேரளாவில் நவ.,16ல் கார்த்திகை ஒன்றாம் தேதி பிறந்தது. இதனால் அன்றைய தினம் சபரிமலை நடை திறந்து, அன்று முதல் தினமும் பூஜைகள் நடைபெறுகிறது. 41வது நாள் அதாவது டிச.,26ல் மண்டலபூஜை நடைபெறுகிறது. அன்று பகல் 12.30 மணிக்கு இந்த பூஜைகள் நடைபெறும். அதற்கு முன்பாக கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் களபபூஜை நடைபெற்று, ஸ்ரீகோயிலுக்குள் எடுத்து செல்லப்பட்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும். இதனால் அன்று காலை 11 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெறும். மண்டலபூஜை முடிந்து நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு திறக்கப்படும் நடை, இரவு 10 மணிக்கு அடைக்கப்படும். அதன் பின்னர் மகரவிளக்கு கால பூஜைக்காக டிச.,30ம் தேதி மாலையில் திறக்கப்படும். தமிழ்நாட்டில் கார்த்திகை ஒன்றாம் தேதி நவ.17ல் பிறந்தது. இதனால் தமிழக கோயில்களில் இம்மாதம் 27ம் தேதி மண்டலபூஜை நடைபெறுகிறது. இதை கருத்தில் கொண்டு 27ல் சபரிமலை நடை திறந்திருக்குமா என தமிழக பக்தர்கள் விசாரிக்கின்றனர். 26ம் தேதி இரவு நடை அடைக்கப்பட்டால், அதன் பின்னர் பம்பையிலிருந்து பக்தர்கள் சன்னிதானம் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதனால் 27ம் தேதி வருபவர்கள் நடை திறக்க 3 நாட்களும், நெய்யபிஷேகத்துக்கு 4 நாட்களும் காத்திருக்க வேண்டும். எனவே சபரிமலையில் 26ம் தேதி மண்டலபூஜை என்பதை கருத்தில் கொண்டும், அன்று காலை 11 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெறும். இதற்கு தகுந்தாற்போல் தமிழக பக்தர்கள் தங்கள் பயணத்திட்டத்தை வகுக்க வேண்டும், என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar