Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தீபத் திருவிழா முடிந்ததை முன்னிட்டு ... ராமேஸ்வரம் கோவில் யானைக்கு மணி மண்டபம் ராமேஸ்வரம் கோவில் யானைக்கு மணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் டிச., 26-ல் மண்டல பூஜை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 டிச
2013
10:12

சபரிமலை: "சபரிமலையில் வரும் 26ம் தேதியிலும், தமிழகத்தில் 27லும் மண்டலபூஜை நடைபெறுகிறது. பக்தர்கள் சபரிமலை மண்டலபூஜை தேதியை கருத்தில் கொண்டு பயணத்தை வகுக்க வேண்டும் என்று தேவசம்போர்டு கேட்டுக்கொண்டுள்ளது. கேரளாவில் நவ.,16ல் கார்த்திகை ஒன்றாம் தேதி பிறந்தது. இதனால் அன்றைய தினம் சபரிமலை நடை திறந்து, அன்று முதல் தினமும் பூஜைகள் நடைபெறுகிறது. 41வது நாள் அதாவது டிச.,26ல் மண்டலபூஜை நடைபெறுகிறது. அன்று பகல் 12.30 மணிக்கு இந்த பூஜைகள் நடைபெறும். அதற்கு முன்பாக கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் களபபூஜை நடைபெற்று, ஸ்ரீகோயிலுக்குள் எடுத்து செல்லப்பட்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும். இதனால் அன்று காலை 11 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெறும். மண்டலபூஜை முடிந்து நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு திறக்கப்படும் நடை, இரவு 10 மணிக்கு அடைக்கப்படும். அதன் பின்னர் மகரவிளக்கு கால பூஜைக்காக டிச.,30ம் தேதி மாலையில் திறக்கப்படும். தமிழ்நாட்டில் கார்த்திகை ஒன்றாம் தேதி நவ.17ல் பிறந்தது. இதனால் தமிழக கோயில்களில் இம்மாதம் 27ம் தேதி மண்டலபூஜை நடைபெறுகிறது. இதை கருத்தில் கொண்டு 27ல் சபரிமலை நடை திறந்திருக்குமா என தமிழக பக்தர்கள் விசாரிக்கின்றனர். 26ம் தேதி இரவு நடை அடைக்கப்பட்டால், அதன் பின்னர் பம்பையிலிருந்து பக்தர்கள் சன்னிதானம் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதனால் 27ம் தேதி வருபவர்கள் நடை திறக்க 3 நாட்களும், நெய்யபிஷேகத்துக்கு 4 நாட்களும் காத்திருக்க வேண்டும். எனவே சபரிமலையில் 26ம் தேதி மண்டலபூஜை என்பதை கருத்தில் கொண்டும், அன்று காலை 11 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெறும். இதற்கு தகுந்தாற்போல் தமிழக பக்தர்கள் தங்கள் பயணத்திட்டத்தை வகுக்க வேண்டும், என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 
temple news
ஊட்டி: ஊட்டி புதிய அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவிலில் கூடாரவல்லி நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar